திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை அயோடின் நுண்சத்து பற்றாக்குறை விழிப்புணர்வுப் பிரசாரம் நடைபெற்றது.
திருவாரூர் பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் சார்பில், அயோடின் நுண்சத்து பற்றாக்குறை தடுப்பு குறித்து துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உலக அயோடின் நுண்சத்து பற்றாக்குறை தடுப்பு தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மைய பெருந்தலைவர் எஸ்.டி. அண்ணாதுரை தலைமை வகித்தார். இதில், நகர காவல் நிலைய ஆய்வாளர் ச. குலோத்துங்கன் பங்கேற்று விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுதுறை மாவட்ட நியமன அலுவலர் செல்வராஜ், தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் பொதுச் செயலர் ஆர். ரமேஷ், மாநில ஒருங்கிணைப்பாளர் கே. திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.