திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகேயுள்ள நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரர் கோயிலில் 1,008 தீபமேற்றி பக்தர்கள் திங்கள்கிழமை வழிபட்டனர்.
பெளர்ணமியை முன்னிட்டு, திரளான பக்தர்கள் தீர்த்த வலம் வந்து 1,008 தீபமேற்றி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரரை வழிபட்டனர். முன்னதாக, அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது.
இதேபோல், நீடாமங்கலம் யமுனாம்பாள் கோயிலில் பௌர்ணமியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.