வாடகைக் கார்களில் சவாரிப் பகிர்வு: பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கேஜரிவால் வலியுறுத்தல்

வாடகைக் கார்களில் சவாரிப் பகிர்வில் (RIDE SHARING) பங்கேற்கும் பெண் பயணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என தில்லி முதல்வர்

வாடகைக் கார்களில் சவாரிப் பகிர்வில் (RIDE SHARING) பங்கேற்கும் பெண் பயணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை தெரிவித்தார்.  "நகர டாக்ஸி-2017' திட்டம் தில்லி அரசால் மிக  விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.  இத்திட்டம் வாடகைக் கார்களில் சவாரிப் பகிர்வு அனுமதிக்கப்படமாட்டாது எனத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் முதல்வர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார். 
இது தொடர்பாக  தனது சுட்டுரையில் (ட்விட்டர்) கேஜரிவால் கூறியிருப்பதாவது:  "சவாரிப் பகிர்வு நல்லதொரு திட்டமாகும்.  இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம். அறிமுகமில்லாத பயணிகளுடன் பயணிப்பது பெண் பயணிகளுக்கு பாதுகாப்பானதா என்பது தொடர்பாக ஆராய்ந்து வருகிறோம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com