தெற்கு தில்லியில் உள்ள பேருந்து நிறுத்தம் ஒன்றில், ஏசி வசதி செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
லாஜ்பத் நகரில் உள்ள இந்த பேருந்து நிறுத்தத்தில் ஜப்பானைச் சேர்ந்த ஏசி நிறுவனம் ஒன்று இந்த வசதிக்கு ஏற்பாடு செய்துள்ளது. தில்லி போக்குவரத்து நிறுவனத்தின் பேருந்து நிறுத்தங்களில் தனது நிறுவனத்தை விளம்பரப்படுத்தும் ஒப்பந்தத்தின் பேரில் அந்த நிறுவனம் இந்த வசதியை செய்துகொடுத்துள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.
தில்லியில் கோடை வெளியிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், பேருந்து நிறுத்தத்தில் செய்யப்பட்டுள்ள இந்த வசதியால் லாஜ்பத் நகர் பகுதி பயணிகள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.