30 வயது நபர் சுட்டுக் கொலை

வடகிழக்கு தில்லியில் 30 வயது நபர் ஒருவர் 3 நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வடகிழக்கு தில்லியில் 30 வயது நபர் ஒருவர் 3 நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறியதாவது:
ரஞ்சித் என்ற அந்த நபர், கடந்த வியாழக்கிழமை இரவு தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த 3 நபர்கள் ரஞ்சித்தை நோக்கி துப்பாக்கியால் 3 முறை சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
இதில், ஒரு தோட்டா தலையில் பாய்ந்ததால் ரஞ்சித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். கடந்த 2 நாள்களுக்கு முன்பு ஏதோ ஒரு விவகாரம் தொடர்பாக சிலருடன் ரஞ்சித்துக்கு சச்சரவு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இதனிடையே கொலை செய்த நபர்கள் குறித்த சில அடையாளங்கள் கிடைத்துள்ளன. அவர்களை நெருங்கியிருக்கிறோம்; விரைவில் கைது செய்வோம் என்று போலீஸார் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com