மத்திய, மாநில அரசு எஸ்சி,எஸ்டி ஊழியர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

ஆதிதிராவிடர் நலத் துறையில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளைக் கண்டித்து மத்திய,மாநில அரசு எஸ்சி,எஸ்டி ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் திருநெல்வேலியில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம்

ஆதிதிராவிடர் நலத் துறையில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளைக் கண்டித்து மத்திய,மாநில அரசு எஸ்சி,எஸ்டி ஊழியர்கள் கூட்டமைப்பின் சார்பில் திருநெல்வேலியில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சந்திப்பு ரயில் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலத் தலைவர் ஏ.எம்.ராஜா தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் எல்ஐசி சுவாமிநாதன் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்து பேசினார். சங்க மாநிலப் பொதுச்செயலர் ராஜேந்திரசோழன் உரையாற்றினார். மாவட்டச் செயலர் சி.குமார், மாவட்டப் பொருளளர் மாரியப்பன், துணைப் பொதுச் செயலர் சின்னராஜ், ஆகியோர் பேசினர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலக் குழு உறுப்பினர் பூ.கோபாலன், அரசு ஊழியர் ஐக்கியப் பேரவை மாநில துணைத் தலைவர் அம்பேத்கர் உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தமிழக அரசின் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் விடுதிகளில் நடைபெறும் முறைகேடுகல், ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விடுதிகளில் மாணவர்களுக்க வழங்க வேண்டிய உணவுக் கட்டணம் நிலுவைத் தொகை ரூ.1.57 கோடியை விரைந்து வழங்க வேண்டும். விடுதி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய போர்வை,பாய்,தலையணை,தட்டு,டம்ளர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை நிலுவையின்றி வழங்க வேண்டும். விடுதிகளுக்குத் தரமற்ற பொருள்களை விநியோகம் செய்தது தொடர்பாக விசாரணைக் குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com