டிசம்பரில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் டிசம்பர் மாதத்தில் 6 இடங்களில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தில் டிசம்பர் மாதத்தில் 6 இடங்களில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் திருநெல்வேலி மின்பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் எஸ்.இளம்பரிதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் மின்நுகர்வோரின் குறைகளைத் தீர்க்கும் வகையில் மேற்பார்வை பொறியாளர் தலைமையிலான மின்நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் 7 இடங்களில் முறையே முற்பகல் 11 மணி முதல் நடத்தப்பட உள்ளது. இதில் மனுக்களை அளித்து குறைகளை நிவர்த்தி செய்யலாம்.
முதல் கூட்டம் வள்ளியூர் மின்கோட்ட அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (டிச.5) திருநெல்வேலி கிராமப்புற கோட்ட அலுவலகத்திலும், 8 ஆம் தேதி சங்கரன்கோவில் கோட்ட அலுவலகத்திலும், 12 ஆம் தேதி கடையநல்லூர் கோட்ட அலுவலகத்திலும், 15 ஆம் தேதி திருநெல்வேலி நகர்ப்புறம் கோட்ட அலுவலகத்திலும், 19 ஆம் தேதி தென்காசி கோட்ட அலுவலகத்திலும், 22 ஆம் தேதி கல்லிடைக்குறிச்சி கோட்ட அலுவலகத்திலும் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடைபெற உள்ளது என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com