புளியங்குடியில் கஞ்சா விற்றதாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
புளியங்குடி இந்திரா காலனியைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் செல்வக்குமார் (34). இவர் புளியங்குடியில் உள்ள பிரதான பூ மார்க்கெட்அருகே நின்று கொண்டிருந்தாராம். அப்போது அருகே வந்த கஞ்சா வேணுமா என்று கேட்டுள்ளார். எனக்கு கஞ்சா பழக்கமில்லை எனக் கூறிய செல்வக்குமாரை அந்நபர் மிரட்டினாராம். இது குறித்த புகாரின்பேரில், புளியங்குடி போலீஸார் விசாரணை நடத்தி பாம்புக்கோவில் சந்தை ரோடு, டி.என்.புதுக்குடியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் காளிமுத்து (48) என்பவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவைக் கைப்பற்றினர்.