கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் கோ-ஆப்டெக்ஸில் விழாக்கால சிறப்பு தள்ளுபடி

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி சந்திப்பில் உள்ள காந்திமதி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெற்று வருகிறது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி சந்திப்பில் உள்ள காந்திமதி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெற்று வருகிறது.
இந்தச் சிறப்பு தள்ளுபடி விற்பனையை  பாளையங்கோட்டை சேகரத் தலைவர் பீட்டர் தேவதாஸ் தொடங்கிவைத்தார். முதல் விற்பனையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் அழகுராஜா பெற்றுக்கொண்டார்.  கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ம.சண்முகசுந்தரம் வரவேற்றார். 
2018, ஜனவரி 23 வரை நடைபெறும் இந்தச் சிறப்புச் சலுகை விற்பனைக்காக பாரம்பரிய வடிவமைப்புகளில் காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள், மென்பட்டுச் சேலைகள், காட்டன் சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், ஏற்றுமதி படுக்கை விரிப்பு ரகங்கள், வேட்டிகள், துண்டுகள், ரெடிமேட் சட்டைகள், லினன் சட்டைகள் உள்பட அனைத்து ரகங்களும் வைக்கப்பட்டுள்ளன. 30 சதவீதம் வரை சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.  
கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகைக்கு திருநெல்வேலி மண்டலத்தில் ரூ.4 கோடியே 80 லட்சம் விற்பனை நடைபெற்றது. நிகழாண்டு விற்பனை இலக்காக ரூ.6 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
மேலும் காந்திமதி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகை விற்பனை ரூ.90 லட்சம் ஆகும். தற்போதைய இலக்காக ரூ.1 கோடியே 12 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்பு தள்ளுபடி விற்பனைக்கான ஏற்பாடுகளை காந்திமதி கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் கனகசபாபதி செய்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com