திருநெல்வேலி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (டிச. 8) நடைபெறுகிறது.
இதுதொடர்பாக திருநெல்வேலி கோட்டாட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி கோட்டத்தில் உள்ள திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சங்கரன்கோவில், திருவேங்கடம், மானூர் வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (டிச. 8) முற்பகல் 11 மணிக்கு கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று மனுக்களை அளிக்கலாம் எனகுறிப்பிடப்பட்டுள்ளது.