குற்றாலம் பேரருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததையடுத்து, காலையில் சுமார் ஒரு மணி நேரம் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
குற்றாலம் பகுதியில் சனிக்கிழமை இரவு பெய்த மிதமான மழை காரணமாக பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் கொட்டியது.
பேரருவியில் பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் சீறிப் பாய்ந்ததையடுத்து, பாதுகாப்பு கருதி பொதுமக்கள் குளிக்க போலீஸார் தடை விதித்தனர். சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பின் தண்ணீரின் சீற்றம் தணிந்ததையடுத்து, பொதுமக்கள் குளிக்க மீண்டும் அனுமதிக்கப்பட்டனர்.