குறைதீர் கூட்டத்தில் 69 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 69 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 69 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.
ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோரிக்கை உதவித் தொகை, அடிப்படை வசதிகள், தண்ணீர் பிரச்னை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கை  மனுக்களை அளித்தனர்.  
மனுக்கள் அனைத்தும் அந்தந்த துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து, குறித்த காலத்துக்குள் பரிசீலித்து பதில் அளிக்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டார்.
மேலும், பாளையங்கோட்டை வட்டம், மேலத்திடியூரைச் சேர்ந்த 21 பேர்,  ஆலங்குளம் வட்டம், கழுநீர்குளத்தைச் சேர்ந்த 48 பயனாளிகள் என மொத்தம் 69 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. தாட்கோ மூலம் தனிநபர் பங்குத் தொகை மற்றும் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கும் திட்டத்தில் பயனாளி ஒருவருக்கு ரூ.6.64 லட்சம் மதிப்பில் சுற்றுலா வாகனக் கடன் வழங்கப்பட்டது. கறவை மாடு வளர்ப்புத் திட்டத்தில் ரூ.7.20 லட்சம் மதிப்பில் கடன் வழங்கும் வகையில் முதல் தவணையாக ரூ.2.66 லட்சம் மற்றொரு பயனாளிக்கு வழங்கப்பட்டது. இவைத் தவிர, 16 பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.
இக் கூட்டத்தில், திருநெல்வேலி கோட்டாட்சியர் மைதிலி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் செண்பகவல்லி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com