ராதாபுரம் அருகே இளைஞரை தாக்கியதாக 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ராதாபுரம் அருகே உள்ள பாப்பான்குளத்தைச் சேர்ந்தவர் கண்ணன்(25). இவர் வீட்டில் இருந்த நாயை காணவில்லையாம். இது குறித்து விசாரித்தபோது நாயை மாறநாடார் குடியிருப்பைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் கார்த்திக் திருடிச் சென்றிருப்பது தெரியவந்ததாம். இதனை அடுத்து தனது நாயை திருப்பித் தருமாறு கண்ணன் கேட்டாராம். அப்பேது அந்த நாயை தனக்கு விலைக்கு தருமாறு கார்த்திக் கேட்டாராம். தொடர்ந்து ரூ. 8 ஆயிரம் விலை பேசி முதல் தவணையாக ரூ. 4 ஆயிரத்தை கண்ணன் பெற்றுக்கொண்டாராம். பின்னர் கார்த்திக் தனக்கு நாய் வேண்டாம் எனக் கூறி, பணத்தை திரும்பி தருமாறு கேட்டாராம். அப்போது இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் கார்த்திக்கும், அவரோடு வந்திருந்த தெற்கு குமாரபுரத்தைச் சேர்ந்த பால்சாமி மகன் முருகன்(27), மாறநாடார் குடியிருப்பைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் சுனில்(22), குமாரபுரம் முருகன் மகன் தங்கேஷ்வரன்(24), செளந்தரலிங்கபுரம் சந்திரன் மகன் சங்கர்(18) மற்று சிலர்சேர்ந்து கண்ணனை அடித்து காயப்படுத்தினராம். இது குறித்து கண்ணன் ராதாபுரம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். காவல் உதவி ஆய்வாளர் சிவாகரன் வழக்குப் பதிந்து 5 பேரை கைது செய்தார்.