கோவையில் அபுதாஹிர் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி, காவல் துறையைக் கண்டித்து கடையநல்லூரில் வெள்ளிக்கிழமை எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் திவான்ஒலி தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலர் மஹபூப்அன்சாரி, மாவட்ட துணைத் தலைவர் நயினாமுஹமது கனி, மாவட்டச் செயலர் சேக்சிந்தாமதார், மாவட்டப் பொருளாளர் சர்தார், தொழிற்சங்க மாவட்டத் தலைவர் ஹக்கீம், தொகுதித் தலைவர் நாகூர்கனி, நகரத் தலைவர் யாசர்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் ஜாபர்அலிஉஸ்மானி பேசினார்.
நகரத் தலைவர் பாதுஷா நன்றி கூறினார்.