திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 2016-17ஆம் ஆண்டுக்கு எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு எழுதிய மாற்றுத் திறனாளிகள் மாணவிகள் அதிக தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் பார்வையற்றோர் 23 பேர், வாய்பேச மற்றும் காதுகேளாதோர் 55 பேர், உடல் ஊனமுற்றோர் 59 பேர், இதர பிரிவினர் 29 பேர் என மொத்தம் 166 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் பார்வையற்றோர் 23 பேரும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சியை பிடித்துள்ளனர். வாய்பேச மற்றும் காதுகேளாதோரில் 53 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 96.36 ஆகும். உடல் ஊனமுற்றோரில் 58 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 98.31 ஆகும். இதர வகைகளில் 28 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 96.55 ஆகும்.
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பார்வையற்றோர் 18 பேர், வாய்பேச மற்றும் காதுகேளாதோர் 31 பேர், உடல் ஊனமுற்றோர் 31 பேர், இதர பிரிவினர் 88 பேர் என மொத்தம் 168 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் பார்வையற்றோர் 17 பேரும் தேர்ச்சி பெற்று 94.44 சதவீத தேர்ச்சியை பிடித்துள்ளனர். வாய்பேச மற்றும் காதுகேளாதோரில் 30 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 96.77 ஆகும். உடல் ஊனமுற்றோரில் 29 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 93.55 ஆகும். இதர வகைகளில் 75 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 85.23 ஆகும்.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பார்வையற்றோர் 9 பேர், வாய்பேச மற்றும் காதுகேளாதோர் 6 பேர், உடல் ஊனமுற்றோர் 31 பேர், இதர பிரிவினர் 26 பேர் என மொத்தம் 72 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் பார்வையற்றோர் 9 பேரும் தேர்ச்சி பெற்று 100 சதவீத தேர்ச்சியை பிடித்துள்ளனர். வாய்பேச மற்றும் காதுகேளாதோரில் 5 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 83.33 ஆகும். உடல் ஊனமுற்றோரில் 30 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 96.77 ஆகும். இதர வகைகளில் 25 பேர் தேர்ச்சி பெற்றனர்.