திருநெல்வேலியில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் விபத்துத் தடுப்பு விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பலகையைக் கைகளில் ஏந்தி இப்பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரி கூறியது: விபத்துகளைத் தடுக்கும் நோக்கத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள், தனியார் பேருந்து, வாகன ஓட்டுநர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இப்பிரசாரம் செய்யப்படுகிறது. வாரத்தில் 2, 3 நாள்கள் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள பேருந்து நிலையங்கள், கிளைப் பணிமனைகள், போக்குவரத்து மிகுந்த பிரதான சாலையில் இதுபோன்ற பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார் அவர்.