விபத்துத் தடுப்பு விழிப்புணர்வுப் பிரசாரம்

திருநெல்வேலியில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் விபத்துத் தடுப்பு விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது

திருநெல்வேலியில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் விபத்துத் தடுப்பு விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
பாளையங்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பலகையைக் கைகளில் ஏந்தி இப்பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரி கூறியது: விபத்துகளைத் தடுக்கும் நோக்கத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள், தனியார் பேருந்து, வாகன ஓட்டுநர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இப்பிரசாரம் செய்யப்படுகிறது. வாரத்தில் 2, 3 நாள்கள் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள பேருந்து நிலையங்கள், கிளைப் பணிமனைகள், போக்குவரத்து மிகுந்த பிரதான சாலையில் இதுபோன்ற பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com