குறுக்குத்துறை கோயிலில் கந்தசஷ்டி திருவிழா: அக். 20 இல் தொடக்கம்

திருநெல்வேலி குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி  கோயிலில் கந்தசஷ்டி திருவிழா அக். 20 ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.

திருநெல்வேலி குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி  கோயிலில் கந்தசஷ்டி திருவிழா அக். 20 ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.
குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம்  கந்தசஷ்டி திருவிழா நடைபெற்று வருகிறது.  நிகழாண்டு இத்திருவிழா வெள்ளிக்கிழமை (அக்.20) தொடங்குகிறது.
இதையொட்டி அன்றயை தினம் காலை கோயிலில் யாகசாலை பூஜை,  அபிஷேகம்,  அலங்காரம், சிறப்பு தீபாராதனை,  மாலையில் சுவாமி வீதி உலா ஆகியன நடைபெறுகிறது.  தொடர்ந்து 25 ஆம் தேதி வரை யாகசாலை பூஜை,  தீபாராதனை,  சுவாமி வீதி உலா நடைபெறவுள்ளது.
புதன்கிழமை ( அக்.25)  மாலை 4 மணிக்கு சூரசம்ஹாரம்  நடைபெறுகிறது.  வியாழக்கிழமை (அக்.26) காலை 9 மணிக்கு மேல் 10.30 க்குள் சி.என். கிராமத்தில் தவசு காட்சி அளித்தல் வைபவம்,  இரவு 7 மணிக்கு திருக்கல்யாண வைபவம் ஆகியன நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com