உலகத் திருக்குறள் தகவல் மையம் சார்பில் நடைபெற்ற கலைப்போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
உலகத் திருக்குறள் தகவல் மையம் சார்பில் திருநெல்வேலி மாவட்ட பள்ளி மாணவர்-மாணவிகளுக்கு கலைப் போட்டிகள் பாளையங்கோட்டை குழந்தை இயேசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மையத் தலைவர் பேராசிரியர் பா.வளன்அரசு தொடங்கிவைத்தார். பாரத் மாண்டிசோரி பள்ளி மாணவர் அன்புச்செல்வன் ஐநூறு திருக்குறளை ஒப்பித்தார். கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். நல்லாசிரியர் க.ஞா.சான்பீற்றர், முனைவர் செ.பிரமசக்தி, கி.பிரபா, வை.ராமசாமி, சான்சி, பாசியம் ஆகியோர் நடுவர்களாகச் செயல்பட்டனர்.
கட்டுரைப் போட்டியில் கார்த்திகா, கலையரசி, கவிதா, முனவரா, கலைச்செல்வி, பேச்சுப் போட்டியில் வருசினி பிரபா, யோவான், இன்பென்றா மேரி, இசக்கியம்மாள், கிளாரிசா, மாதவன் ஆகியோர் வெற்றி பெற்றனர். ஓவியப் போட்டியில் மாரியரசி, யமுனா, நினைவாற்றல் போட்டியில் அன்புச்செல்வன், குணப்பிரியா, லட்சுமி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
குழந்தை இயேசு பள்ளித் தாளாளர் சிறிய புட்பம் மாணவர்-மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.