லாரி ஓட்டுநருக்கு வெட்டு: இளைஞர் கைது

வாசுதேவநல்லூரில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக லாரி ஓட்டுநரை அரிவாளால் வெட்டியதாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.

வாசுதேவநல்லூரில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக லாரி ஓட்டுநரை அரிவாளால் வெட்டியதாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.
வாசுதேவநல்லூர், கலைஞர் காலனியைச் சேர்ந்தவர் முருகன் மகன் ரஞ்சித் (22). லாரி ஓட்டுநர். அதே பகுதியைச் சேர்ந்தவர் பக்கிரி மகன் மாரிச்சாமி (20). இவரும் லாரி ஓட்டுநர். மாரிச்சாமிக்கு ரஞ்சித் மைத்துனர் முறையாவார். தீபாவளியன்று இரவில், மாரிச்சாமியின் மனைவி கவிதாவிடம் (20) ரஞ்சித் தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.  
இந்நிலையில், சனிக்கிழமை கலைஞர் காலனி பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த ரஞ்சித்தை மாரிச்சாமி கண்டித்தாராம். இதில், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த மாரிச்சாமி,  ரஞ்சித்தை அரிவாளால் வெட்டினாராம்.
இதுகுறித்து, வாசுதேவநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் திருமலைச்சாமி வழக்குப் பதிந்து, மாரிச்சாமியைக் கைது செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com