விவேகானந்தர் மன்றக் கூட்டம்

பாளையங்கோட்டையில் விவேகானந்தர் மன்றத்தில் 154 ஆவது கூட்டம்  நடைபெற்றது.

பாளையங்கோட்டையில் விவேகானந்தர் மன்றத்தில் 154 ஆவது கூட்டம்  நடைபெற்றது.
மாநிலத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு பா. வளன்அரசு தலைமை வகித்தார்.  அமைப்பின் நிறுவனர் சி. முத்துசாமி முன்னிலை வகித்தார்.  இராமன் இறைவணக்கம் பாடினார்.  
விவேகானந்தரின் ஆன்மிகப் பணிகள் குறித்து சிவ. கிருபாகரன்,  பேராசிரியர் சிவ. சத்தியமூர்த்தி ஆகியோர் பேசினர்.  இதைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் தமிழ் முழக்கப்பேரவைத் தலைவர் பி. ஆவுடையப்பன்,  எழுத்தாளர் செ. திவான், சொ. முத்துசாமி,  கோதை மாறன்,  முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வரும் டிச. 25 ஆம் தேதி விவேகானந்தர் தவம் செய்த பாறைக்கு சென்று தியானம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.
செயலர் சுந்தரம் வரவேற்றார்.  பாக்கியம்  நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com