பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு: 5744 பேர் எழுதினர்

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடத்துக்கான தேர்வை 5744 பேர் சனிக்கிழமை எழுதினர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடத்துக்கான தேர்வை 5744 பேர் சனிக்கிழமை எழுதினர்.
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணியிடத்துக்கான தேர்வு, திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், சங்கரன்கோவில், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, முக்கூடல் உள்ளிட்ட 21 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.
தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 7, 296 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 1,552 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. 5,744 பேர் தேர்வு எழுதினர். பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வை மாவட்ட வருவாய் அலுவலர் பூ. முத்துராமலிங்கம், திருநெல்வேலி கோட்டாட்சியர் மைதிலி ஆகியோர் பார்வையிட்டனர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோ. தனமணி தலைமையில் 6 வட்டாட்சியர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் அடங்கிய குழுவினர் தேர்வினை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com