நீடிக்கும் கோடை மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் நீடித்து வரும் கோடை மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நீடித்து வரும் கோடை மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கோடை காலம் தொடங்கியுள்ளதால், தற்போது கடும் வெப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி குண்டாறு அணையில் 2 மி.மீ., ஆய்க்குடியில் 23 மி.மீ., செங்கோட்டையில் 4 மி.மீ., தென்காசியில் 25 மி.மீ., சங்கரன்கோவிலில் 5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
இதனிடையே, திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், பேட்டை, சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி உள்பட பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மிதமான மழை பெய்தது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுகிறது. பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு விநாடிக்கு 140 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு 200 கனஅடி, அடவிநயினார், கொடுமுடியாறு, ராமநதி, கருப்பாநதி ஆகிய அணைகளுக்கு தலா 20 கனஅடி நீர்வரத்து இருந்தது. நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை நீடித்து வருவதால் மணிமுத்தாறு அணையில் இருந்து குடிநீர் தேவைக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டு மீண்டும் 200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
நீர்மட்டம்: பாபநாசம் அணை-22.90 அடி, சேர்வலாறு அணை-19.68 அடி, மணிமுத்தாறு அணை-80.50 அடி, கடனாநதி அணை-58.40 அடி, ராமநதி அணை-50.50 அடி, கருப்பாநதி அணை-44.95 அடி, குண்டாறு அணை-22.38 அடி, அடவிநயினார் அணை- 49 அடி, வடக்குப்பச்சையாறு அணை-5 அடி, நம்பியாறு அணை-11.84 அடி, கொடுமுடியாறு அணை- 5 அடியாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com