திருநெல்வேலி மாநகராட்சி முன்னாள் துணை மேயர் எஸ்.விஸ்வநாத பாண்டியன் (70) உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை (ஏப். 16) இரவு காலமானார்.
திருநெல்வேலி நகரம், பாட்டப்பத்தைச் சேர்ந்த இவர், மாநகராட்சியில் 1996-2001; 2001-2006 ஆண்டுகளில் துணை மேயராக பதவி வகித்தார். தற்போது, திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினராக இருந்துவந்தார். இவருக்கு 4 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர்.