சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தையொட்டி பாளையங்கோட்டையில் அவருடைய மணிமண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலர் டிடிவி தினகரன் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்துகிறார்.
இது தொடர்பாக அமமுகவின் மாநகர் மாவட்டச் செயலர் கல்லூர் இ.வேலாயுதம் வெளியிட்டுள்ள அறிக்கை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலர் டிடிவி தினகரன், பாளையங்கோட்டையில் உள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அன்றைய தினம் காலை 11 மணிக்கு ரஹ்மத் நகர் அருகேயுள்ள நான்கு வழிச்சாலையில் டிடிவி தினகரனுக்கு மாநகர் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. காலை 11.15 மணிக்கு பாளையங்கோட்டை சட்டக் கல்லூரி முன்பு கட்சியின் வழக்குரைஞர் அணி மற்றும் சட்டக் கல்லூரி மாணவர் அணி சார்பில் தினகரனுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஒண்டிவீரனுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார் தினகரன். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் திரளாக கலந்துகொள்ள வேண்டும்.