தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில், திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற மொழிபெயர்ப்பு அலுவலர், மொழி பெயர்ப்பாளர் பதவிக்கான தேர்வில் 62 பேர் கலந்து கொண்டனர்.
தமிழக நீதித்துறையில் காலியாக இருக்கும் மொழிபெயர்ப்பு அலுவலர், மொழி பெயர்ப்பாளர் பதவிக்கான தேர்வு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் இத்தேர்வு எழுத 125 பேருக்கு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. திருநெல்வேலியில் சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இத்தேர்வில் 62 பேர் மட்டும் கலந்துகொண்டனர். 63 பேர் தேர்வு எழுதவில்லை.
இத்தேர்வை வட்டாட்சியர், சுற்றுக்குழு அலுவலர் அடங்கிய குழுவினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.