திருநெல்வேலி மாநகர ஊர்க்காவல் படைப் பிரிவுக்கு வீரர்கள் தேர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகர ஊர்க்காவல் படைப் பிரிவில் காலியாக உள்ள 33 ஆண்கள், 13 பெண்கள் என மொத்தம் 46 பணியிடங்களைப் பூர்த்தி செய்வதற்கு மாநகர காவல் ஆணையர் கபில்குமார் சராட்கர் உத்தரவிட்டார். அதன்படி ஆள்கள் தேர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாநகர ஆயுதப்படை உதவி ஆணையர் (பொ) சுதந்திரராஜன் தலைமையில், ஊர்க்காவல் படை வட்டார தளபதி செல்வம் முன்னிலையில் தேர்வு நடைபெற்றது. 13 பெண்கள், 87 ஆண்கள் என மொத்தம் 100 பேர் பங்கேற்றனர். அவர்களின் சுயவிவரக் குறிப்புகளைப் பெற்றுக் கொண்ட பின்பு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. அடுத்ததாக 19ஆம் தேதி அடுத்தக்கட்ட தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.