கூட்டுறவு அலுவலர்களுக்குப் பயிற்சி

திருநெல்வேலியில் கூட்டுறவு தணிக்கை அலுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

திருநெல்வேலியில் கூட்டுறவு தணிக்கை அலுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.
வண்ணார்பேட்டையில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற பயிற்சிக்கு கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர் பா.ஷீபா தலைமை வகித்தார். இ.ராஜாசிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சு.வெங்கடாசலபதி வரவேற்றார்.
திருநெல்வேலி மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் சி.குருமூர்த்தி பேசுகையில், கூட்டுறவு சங்கங்களின் தணிக்கைகளை விரைவாக முடிக்க வேண்டும் என்றார்.
இப்பயிற்சியில் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களுக்கான சட்டம் 1993, விதிகள் 1998 மற்றும் திருத்தங்கள், அலுவலக நிர்வாக ஒழுங்கு நடவடிக்கை விதிகள், தொழிலாளர் சட்டம், ஜி.எஸ்.டி. வரி மற்றும் சொத்துக்களை வகைப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது. சு.பாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, சங்கரசுப்பையா, சுப்பிரமணியன், ராமமூர்த்தி ஆகியோர் பயிற்சி அளித்தனர். மேலாண்மை இயக்குநர் செல்வகுமார், துணைப் பதிவாளர் தொண்டிராஜ், முதன்மை வருவாய் அலுவலர் ஏ.பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com