வீட்டில் மது விற்பனை: ஒருவர் கைது

சிவகிரியில் வீட்டில் மது விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸார் கைது செய்தனர்.

சிவகிரியில் வீட்டில் மது விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகிரி, குமாரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நீராத்திலிங்கம் மகன் அம்மையப்பன் (48). இவர், தனது வீட்டில் மதுபாட்டில்களைப் பதுக்கிவைத்து விற்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், சிவகிரி காவல் உதவி ஆய்வாளர் வேல்முருகன் தலைமையிலான போலீஸார் சென்று சோதனையிட்டனர். 
அப்போது,  அம்மையப்பன் தனது வீட்டுக்குள் மது பாட்டில்களைப் பதுக்கிவைத்து, கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்து, 9 மது பாட்டில்கள், ரூ. 250-ஐ பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com