பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 200 பேருக்கு சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பொங்கல் பொருள்கள் வழங்கப்பட்டன.
அக்கட்சியின் மாணவரணி சார்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, மாணவரணி மாநிலச் செயலர் அக்வின் நோயல் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலர் பி. நட்சத்திர வெற்றி, மாநகர் மாவட்டச் செயலர் எம்.ஏ.சி. சேவியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாளையங்கோட்டை மாநில மாணவரணி அலுவலகத்தை கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலர் என்.எம்.எஸ். விவேகானந்தன் திறந்துவைத்தார். நிகழ்ச்சியில், பயனாளிகள் 200 பேருக்கு பொங்கல் பொருள்கள் வழங்கப்பட்டன.
மாநில இளைஞரணி துணைச் செயலர் எம். ஜெயராஜ், மாவட்ட அவைத் தலைவர் எல். ராஜன், பொருளாளர் சரத்ஆனந்த், பகுதி செயலர்கள் வி. ராகவன், ஸ்ரீதர்ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.