சங்கர்நகர் சங்கர் தொழில்நுட்பக் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், திருநெல்வேலி வட்டாரப் போக்குவரத்துக் கழகம், புறநகர் ரோட்டரி சங்கம் ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு, கல்லூரி முதல்வர் சங்கரசுப்பிரமணியன் தலைமை வகித்தார். ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ஜெ. நயினாமுகம்மது, மண்டலச் செயலர் ஜோஸ்லினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெ. சசி, மத்திய சிறைக் கண்காணிப்பாளர் செந்தாமரைகண்ணன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். கருத்தரங்கில், சாலை விதிகளைக் கடைப்பிடிப்பது குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் டி. நவிலன், எஸ். செல்லப்பா, மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.