திருநெல்வேலி எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி, தருவை பாலிடெக்னிக் கல்லூரிகளில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு, ஸ்காட் கல்விக் குழும நிறுவனர் எஸ். கிளிட்டஸ்பாபு தலைமை வகித்தார். மாணவிகள் பொங்கலிட்டு கொண்டாடினர். முதல்வர் வி. இளங்கோவன், பொதுமேலாளர்கள் இக்னேஷியஸ் சேவியர், க. ஜெயகுமார், நிர்வாக அலுவலர் எஸ். கிருஷ்ணகுமார், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தருவை எப்.எக்ஸ். பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு, பாலிடெக்னிக் முதல்வர் டி.பி. ரூபஸ் தலைமை வகித்தார். நிர்வாக அதிகாரி எம்.மைக்கேல் பொன்ராஜ் முன்னிலை வகித்தார்.
மாணவர்களுக்கான உறி அடித்தல், கோலம் போடுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.