பாளையங்கோட்டை சாராள் தக்கர் பெண்கள் கல்லூரியில் (தன்னாட்சி), காளான் வளர்ப்பு தொழில்நுட்ப இலவச பயிற்சி முகாம் இம்மாதம் 23, 24 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றமும், அக்கல்லூரியும் இணைந்து இப்பயிற்சியை வழங்குகின்றன. இதில், வேலைவாய்ப்பற்றோர், விவசாயிகள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் பங்கேற்கலாம். பயிற்சியில் பங்கேற்க பெயர் பதிவுக்கு இம்மாதம் 22 ஆம் தேதி கடைசி. மேலும், விவரங்களுக்கு 8056607300, 8072505911 ஆகிய செல்லிடப்பேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம் என சாராள் தக்கர் பெண்கள் கல்லூரி முதல்வர் உஷா காட்வின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.