பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் காவல் நண்பர்களுக்கு ஒரு வாரம் சிறப்பு பயிற்சி அளிக்கப் பட்டது.
போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் பணியில் ஈடுபட்டு வரும் கல்லூரி காவல் நண்பர்களுக்கு ஒரு வாரம் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. போக்குவரத்தை எவ்வாறு ஒழுங்குபடுத்துதல் குறித்து காவல்துறை பயிற்றுநர்கள் சங்கர், ஜெயா ஆகியோர் பயிற்சி அளித்தனர். வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிற்சி நிறைவு விழாவுக்கு கல்லூரி முதல்வர் மு. முஹம்மது சாதிக் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக, மாநகர காவல் துணை ஆணையர்
பெரோஸ்கான் அப்துல்லா பங்கேற்றுப் பேசினார். போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளர் சாதுசிதம்பரம், உதவி -ஆய்வாளர் செல்லத்துரை, காவலர் ஜெய்லானி, கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் கலீல்அஹம்மது ஆகியோர் வாழ்த்திப் பேசினர். காவல் நண்பர்கள் குழு அலுவலர் பேராசிரியர் ஏ. அப்துல்அஜீஸ் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் ஜமால் முகம்மது நன்றி கூறினார். மாணவர் சம்சுதீன் தொகுத்து வழங்கினார்.