போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு போட்டி: சோலை அணி வெற்றி

சேரன்மகாதேவியில் நடைபெற்ற போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு கிரிக்கெட் போட்டியில் வீரவநல்லூர் சோலை அணி வெற்றி பெற்றது.காவல்துறை, பொதுமக்களிடையே நல்லுறவை உருவாக்கும் வகையில்

சேரன்மகாதேவியில் நடைபெற்ற போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு கிரிக்கெட் போட்டியில் வீரவநல்லூர் சோலை அணி வெற்றி பெற்றது.
காவல்துறை, பொதுமக்களிடையே நல்லுறவை உருவாக்கும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சேரன்மகாதேவியில் சனிக்கிழமை நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் நான்கு அணிகள் பங்கேற்று விளையாடின.
முதல் போட்டியில் விளையாடிய காவலர் அணி, சேரன்மகாதேவி வழக்குரைஞர் அணிகளில் காவலர் அணி வெற்றி பெற்றது. 2 ஆவது போட்டியில், சோலை கிரிக்கெட் அணி, சேரன்மகாதேவி அணியும் விளையாடின. இதில், சோலை கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது.
இறுதிப் போட்டியில் காவலர் அணியும், சோலை கிரிக்கெட் அணிகளும் மோதின. இதில், சோலை கிரிக்கெட் அணி 60 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பின்னர், நடைபெற்ற நிகழ்ச்சியில், வெற்றி பெற்ற அணிகளுக்கு சேரன்மகாதேவி ஏ.எஸ்.பி. ஆஷிஸ் ராவத் கோப்பை வழங்கிப் பாராட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com