நெல்லை மாவட்டத்தில் 15 வட்டங்களில் 13இல் அம்மா திட்ட முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் வரும் 13-ஆம் தேதி 15 வட்டங்களில்  அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வரும் 13-ஆம் தேதி 15 வட்டங்களில்  அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலியில் 5-ஆம் கட்ட அம்மா திட்ட முகாம் வரும் 13-ஆம் தேதி 15 வட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. அதன்படி திருநெல்வேலி வட்டம் கங்கைகொண்டான், ராதாபுரம் வட்டம் பழவூர், அம்பாசமுத்திரம் வட்டம் அயன்திருவாலீஸ்புரம், நான்குநேரி வட்டம் உன்னங்குளம், சேரன்மகாதேவி வட்டம் தெற்கு அரியநாயகிபுரம், உதயமார்த்தாண்டபுரம், பாளையங்கோட்டை வட்டம் மேலநத்தம், மானூர் வட்டம் குலசேகரமங்கலம், திருவேங்கடம் வட்டம் பெருங்கோட்டூர், தென்காசி வட்டம் தென்காசி, செங்கோட்டை வட்டம் இலத்தூர், வீரகேரளம்புதூர் வட்டம் வடக்கு காவலக்குறிச்சி, ஆலங்குளம் வட்டம் மடத்தூர், சிவகிரி வட்டம் சங்கனாப்பேரி, கடையநல்லூர் வட்டம் திருமலைநாயக்கன்புதுக்குடி, மேலப்புளியங்குடி ஆகிய இடங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை மற்றும் நிறுத்தம் செய்யப்பட்ட முதியோர் உதவித்தொகை மறுபரிசீலனை விண்ணப்பம் உள்பட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, நில தாவாக்கள், சாலை வசதி, குடிநீர் வசதி போன்றவை கோரி அம்மா திட்ட முகாமின்போது பொதுமக்கள் மனு அளிக்கலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com