தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு எதிர்ப்பு: பாளை.யில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து பாளையங்கோட்டையில் மாணவர்கள்-இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து பாளையங்கோட்டையில் மாணவர்கள்-இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது, போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். நெரிசல் மற்றும் தடியடியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதே கோரிக்கையை வலியுறுத்தி பாளையங்கோட்டை நேருஜி திடலில் மாணவர்கள் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாணவர்கள்-இளைஞர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஆ.முத்துப்பாண்டி, கு.டேவிட் ஆகியோர் தலைமை வகித்தனர். இணை ஒருங்கிணைப்பாளர்கள் ம.நாகூர்மீரான் என்ற பரோஸ், விக்னேஷ், சுபாஷ், கணேஷ், பாசித், யாபேஸ்பாண்டியன், விஜி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com