தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து பாளையங்கோட்டையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் தூத்துக்குடியில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தை கண்டித்து சனிக்கிழமை திருநெல்வேலியில் சட்டக் கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாணவர்கள் தமிழ்செல்வன், சுபாஷ் ராமநாதன், வேல்முருகன் உள்பட 25 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.