தென்காசி அருகே வாகனத் தணிக்கையில் 700 கிலோ ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலி மாவட்ட உணவு தடுப்புப் பிரிவு போலீஸார், காவல் ஆய்வாளர் முத்துசுப்பிரமணியன் தலைமையில் தென்காசி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த சுமை ஆட்டோவை சோதனையிட்டபோது, அதில் தலா 50 கிலோ எடையுள்ள 14 மூட்டை ரேஷன் அரிசி கொண்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, சுமை ஆட்டோவை பறிமுதல் செய்த போலீஸார், ரேஷன் அரிசியை கடத்தியதாக தென்காசி ஆய்க்குடியை சேர்ந்த சுமை ஆட்டோ ஓட்டுநர் அரவிந்த்தை(24) கைது செய்தனர். பறிமுதல் செய்த அரிசி நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.