அரபு நாடுகளில் பணிக்குச் சென்று பல்வேறு காரணங்களால் உயிரிழந்த 3 பேரின் உடல்கள் வெள்ளிக்கிழமை திருச்சி வந்தன.
இலங்கையிலிருந்து திருச்சி வந்த ஸ்ரீலங்கன் விமானம் மூலம் அரபு நாடுகளான கத்தாரிலிருந்து (தோஹா), அரியலூர் மாவட்டம் பூண்டி அருகேயுள்ள வேப்பங்குளத்தைச் சேர்ந்த முருகையன் மகன் பழனிசாமி (45)யின் உடல் வந்தது.
கத்தாரில் தொழிலாளியாக பணியாற்றி வந்த அவர், இதயம் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் அண்மையில் உயிரிழந்தார். அதேபோல தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியைச் சேர்ந்த சங்கர் மகன் முருகன் (24) அரபு நாடான தமாமில் பணியாற்றி வந்தார். அவரும் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இறந்ததாக கூறப்படுகிறது.
இதுபோல அரபு நாட்டில் பணியாற்றி வந்தா நாகை மாவட்டம், நாராயணமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஹரி (40)யும் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.
இவர்கள் மூவரின் உடல்களும் வெள்ளிக்கிழமை காலை இலங்கை வழியாக ஸ்ரீலங்கன் விமானம் மூலம் திருச்சி வந்தன. அவற்றை இறந்த மூவரின் உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.