திருச்சி அருகே நகைக்காக பெண்அடித்துக் கொலை: தாய், மகன் கைது

திருச்சி அருகே நகைக்காக பெண்ணை அடித்துக் கொன்ற தாய் மற்றும் 14 வயது மகனை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

திருச்சி அருகே நகைக்காக பெண்ணை அடித்துக் கொன்ற தாய் மற்றும் 14 வயது மகனை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
 திருச்சி மாவட்டம்,  திருவெறும்பூர் அருகே வேங்கூர் சாலையில் உள்ள வாரியார் நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (65) .  இவரது மனைவி முத்துலட்சுமி (60) .  இவரது வீட்டின் எதிர்வீட்டைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்.  இவரது மனைவி  ரேவதி (45) .  இவர்களது மூத்த மகன் நவீன்குமார் (21).  14  வயதுள்ள 2-ஆவது மகன்  9-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர்கள் இரு குடும்பத்தினரும் கடந்த 10 ஆண்டுகளாக நெருக்கமாக பழகி வந்தனர். ரேவதி அடிக்கடி முத்துலட்சுமியிடம் கடன் வாங்குவாராம். சில நேரங்களில் அவரது நகைகளை வாங்கி அடகு வைத்து பணம் பெற்று, பின் திருப்பிக் கொடுத்துள்ளார். சில காலமாக ரேவதி கடன்களை ஒழுங்காக திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதையடுத்து ரேவதி மீண்டும் முத்துலட்சுமியிடம் கடன் கேட்ட போது, அவர் தர மறுத்துள்ளார்.
இந்நிலையில்,  புதன்கிழமை மாலை ரேவதி தன்னை அழைத்ததாக வீட்டில் கூறி விட்டு வீட்டிலிருந்த சென்ற முத்துலட்சுமியை நீண்டநேரமாகியும் காணவில்லையாம். ரேவதி வீட்டில் உறவினர்கள் விசாரித்ததில் முத்துலட்சுமி மாலையே வீட்டிற்குச் சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் முத்துலட்சுமியை காணாததால், திருவெறும்பூர் காவல் நிலையத்தில் அவரது மகள் ஈஸ்வரி புகாரளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
 இந்நிலையில் முத்துலட்சுமியின் சடலம் அருகிலிருந்த வடிகால் கால்வாயில் ரத்தக்காயங்களுடன் வியாழக்கிழமை காலை கிடந்துள்ளது. அவர் அணிந்திருந்த நகைகளையும் காணவில்லையாம். தகவலறிந்த திருவெறும்பூர் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
 விசாரணையில்,  முத்துலட்சுமியின் 10 பவுன் நகைக்காக ஆசைப்பட்டு அவரை தனது  வீட்டிற்கு வரவழைத்த ரேவதி, கழிவறைக்குப் பயன்படுத்தும் ஆசிட்டை வலுக்கட்டாயமாக முகர வைத்து, மயக்கமடையச் செய்து,  வீட்டிலிருந்த  இரும்பு  கம்பியால் தலையில் அடித்துக் கொன்றதும்,  இதற்கு அவரது 14 வயது இளைய மகனும் துணையாக இருந்ததுள்ளார். அதைதொடர்ந்து சடலத்தை இரவில் கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு, நள்ளிரவில் எதிரில் உள்ள வடிகால் கால்வாயில் இருவரும் சேர்ந்து வீசியது தெரியவந்தது.
இதையடுத்து திருவெறும்பூர் போலீஸார், ரேவதி மற்றும் அவரது 14 வயது இளைய மகனையும் வியாழக்கிழமை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com