திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே பாலத்தின் தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
தொட்டியம் அருகேயுள்ள பாப்பாபட்டி பனங்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ராஜசேகர் (26). நாமக்கல் மாவட்டம் பெரிய சிந்தம்பட்டி சேர்ந்த மலையாளன் மகன் மணிகண்டன் (26). இவர்கள் இருவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை இரவு பாப்பாபட்டியில் இருந்து தொட்டியத்துக்கு வந்துகொண்டிருந்தனர். தொட்டியம் அருகே உள்ள கொசவம்பட்டி புங்காத்து வாரி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோரத்தில் இருந்த பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி கீழே விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த ராஜசேகர் முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மணிகன்டன் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து தொட்டியம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.