திருச்சி கோட்டை - முத்தரசநல்லூர் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உடல் துண்டான நிலையில் இருந்த ஆண் சடலத்தை ரயில்வே போலீஸார் புதன்கிழமை கைப்பற்றினர்.
இறந்த நபர் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. சுமார் 30 வயது மதிக்கத்தக்க உடையவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
திருச்சி ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.