ஸ்ரீரங்கம் வட்ட மாதாந்திர ஓய்வூதியர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பொன். கலியபெருமாள் தலைமை வகித்தார். கூட்டத்தில் 1.1.2006 முன் பணி நிறைவுற்ற ஓய்வூதியர்கள் மிகக் குறைந்த ஓய்வூதியம் பெறுவதால் மூத்த ஓய்வூதியர்கள் பயன் பெறும் வகையில் சமச்சீர்
ஓய்வூதியத்தை அரசு வழங்க வேண்டும், அதேபோல குடும்ப ஓய்வூதியம் நீண்ட காலமாக 20 சதவிகிதம் வழங்கப்படுவதை 40 சதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன. துணைத் தலைவர் சங்கரநாராயணன், நாச்சிமுத்து, ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.