ஆதரவற்ற மூதாட்டி மீட்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பெற்ற பிள்ளைகள் கைவிட்ட நிலையில் சுற்றித் திரிந்த மூதாட்டியை முதியோர் காப்பகத்தார் மீட்டனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பெற்ற பிள்ளைகள் கைவிட்ட நிலையில் சுற்றித் திரிந்த மூதாட்டியை முதியோர் காப்பகத்தார் மீட்டனர்.
மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் பொன்னம்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி ஞானமணி (77). கணவரை இழந்த நிலையில்  பிள்ளைகளும் இவரைக் கைவிட்டதையடுத்து துவரங்குறிச்சி பேருந்து நிலையப் பகுதிகளில் கடந்த சில காலமாக சுற்றித் திரிந்து  யாசகத்தால்  வாழ்ந்து வந்தார்.
தகவலறிந்த விடிவெள்ளி சிறப்பு இல்ல காப்பாளர் சரிதா துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் இருந்த ஞானமணியை முதியோர் இல்லத்திற்கு அழைத்துச் சென்று சேர்த்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com