திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை ரயில் என்ஜின் தடம் புரண்டது.
திருச்சி பொன்மலையிலிருந்து ஜங்ஷன் யார்டு பகுதிக்கு பெட்டிகளில் இணைப்பதற்காக 2 ரயில் என்ஜின்களுடன் சண்டிங் என்ஜின் வியாழக்கிழமை இரவு வந்து கொண்டிருந்தது. குட்ஷெட் அருகே வந்தபோது சண்டிங் என்ஜினின் ஒரு சக்கரம் தடம்புரண்டது.
தகவலறிந்த ரயில்வே மேலாளர் உதயகுமார்ரெட்டி மற்றும் அதிகாரிகள் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு என்ஜின் மீட்கப்பட்டது. இதனால், எர்ணாகுளம் விரைவு ரயில் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டது.