திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து, கல்லூரி டீன் அனிதா கூறியது: 2017-18ஆம் கல்வியாண்டுக்கு அவசர சிகிச்சை நுட்புநர், சுவாச கோளாறு சிகிச்சை நுட்புநர், சிறுநீரக சுத்திகரிப்புத்துறை நுட்புநர், உணர்வகற்றியல் துறை நுட்புநர், அறுவை அரங்கு நுட்புநர், முடநீக்கியியல் சிகிச்சை பிரிவு நுட்புநர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், மருத்துவ ஆய்வ நுட்புநர் ஆகிய பட்டயப்படிப்புகளுக்கும், நுண்கதிர் மருத்துவ பட்டயப் படிப்புக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை தமிழக அரசின் சுகாதாரத்துறை இணையத்தில் www.tnhealth.org பதிவிறக்கம் செய்யலாம். மருத்துவக் கல்லூரியிலும் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை செயலர், தேர்வுக் குழு, 162. ஈ.வெ.ரா. சாலை, கீழ்பாக்கம், சென்னை-10 என்ற முகவரிக்கு டிசம்பர் 16ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.