வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்க நகைகளை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மலேசியாவிலிருந்து வியாழக்கிழமை நள்ளிரவு திருச்சி வந்த ஏர்ஏசியா விமானத்தில் வந்த பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில், மதுரையைச் சேர்ந்த ஜெயபிரபா மற்றும் ஜெகதீஸ்வரி ஆகிய இருவரும் தலா ரூ. 13.20 லட்சம் மதிப்பிலான அரைகிலோ எடையுள்ள தங்க நகைகளையும், விருத்தாசலத்தைச் சேர்ந்த மகராஜ்பேகம் என்பவர் ரூ. 1.41 லட்சம் மதிப்பிலான 50 கிராம் தங்க நகைகளையும் தங்களது உடைமைகளுக்குள் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவற்றை வெள்ளிக்கிழமை அதிகாலை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் மூவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.