திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த மூதாட்டி சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே எம்.இடையப்படியில் உள்ள முத்துகுளம் பகுதியில் சீமைக் கருவேல காட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மூதாட்டி சடலம் இருப்பதாக துவரங்குறிச்சி காவல்நிலையத்துக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்துள்ளனர்.
இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் விசாரித்ததில் மூதாட்டியின் வயது 65 வயது இருக்கலாம் எனவும், முகம், கை, கால் பகுதிகளில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. பிறகு சடலத்தை பிரேதபரிசோதனைக்காக மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.