வூசு போட்டி: திருச்சி வீரர்,வீராங்கனைகள் சிறப்பிடம்

கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான வூசு சாம்பியன் போட்டியில் திருச்சி வீரர், வீராங்கனைகள் 8 பதக்கங்களைப் பெற்றனர்.

கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான வூசு சாம்பியன் போட்டியில் திருச்சி வீரர், வீராங்கனைகள் 8 பதக்கங்களைப் பெற்றனர்.
கோவை மாவட்டம்,சரவணம்பட்டியில் தமிழ்நாடு வூசு சங்கத்தின் சார்பில் 14 ஆவது வூசு சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவில் கடந்த 10,11ஆம் தேதிகளில் நடைபெற்றன. 29 மாவட்டங்களிலிருந்து வீரர், வீராங்கனைகள் வூசு போட்டியில் பங்கேற்றனர்.
சீனக் கலைப் போட்டியான வூசு போட்டி இரு பிரிவுகளில் நடைபெற்றது. இதில், திருச்சி மாவட்ட அணி சார்பில் 17 பேர் பங்கேற்றனர். 1 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை வீரர், வீராங்கனைகள் பெற்றனர்.
டி. நாகலட்சுமி தங்கத்தையும், தேவிகா, ஆஸ்டின்,சரவணகுமார் வெள்ளிப் பதக்கங்களையும், லதா,கமலா, பொன்னுதாய் உள்ளிட்ட 4 பேர் வெண்கலப் பதக்கங்களையும் பெற்று மாவட்டத்துக்கு சிறப்பு சேர்த்தனர்.
வூசு போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளையும், மாவட்ட நிர்வாகிகள், பயிற்சியாளர்களையும் ஆட்சியர் கு.ராசாமணி திங்கள்கிழமை வாழ்த்தினார்.
அப்போது, மாவட்ட விளையாட்டு அலுவலர் சி. புண்ணியமூர்த்தி, தமிழ்நாடு வூசு சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் எம். வாசுதேவன், மாவட்டச் செயலர் வி. புஷ்பா, பயிற்சியாளர்கள் வெங்கட், ஹரிஹரன் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com