திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதுநிலைத் தமிழ்ப் படிப்பில் சேர ஜூன் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிகள் பள்ளி களத் தலைவர், தமிழியல்துறைத் தலைவர் முனைவர் உ. அலிபாவா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதுநிலைத் தமிழ்ப்படிப்பில் (எம்.ஏ) இரண்டாண்டு காலத்துக்கானசேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இளநிலைத் தமிழ் (பி.ஏ. இலக்கியம்), இளநிலையியல் (பி.ஏ) மற்றும் இளநிலை அறிவியல் (பி.எஸ்சி) முடித்தவர்களும் இப்படிப்பில் சேரலாம். இப்படிப்பில் சேர இம்மாதம் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பல்கலைக்கழகத்தில் நேரடியாக விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம் அல்லது விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்புகளைப் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும். கூடுதல் தகவல்களை பல்கலைக்கழக இணைய முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
இத்துறையில் 20,000க்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட நூலகம், மொழிக்கூடம், ஸ்மார்ட் வகுப்பறை, கருத்தரங்க அறை உள்ளிட்ட வசதிகளைக் கொண்டு செயல்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.